நீரழிவு நோய் என்றால் என்ன? - தமிழர்களின் சிந்தனை களம் நீரழிவு நோய் என்றால் என்ன? - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Thursday, April 8, 2010

    நீரழிவு நோய் என்றால் என்ன?

    நீரழிவு நோய் என்றால் என்ன?

    நாம் உண்கின்ற உணவானது குளுக்கோஸ் எனப்படும் பதார்த்தமாக மாற்றப்பட்டு
    எமது உடலில் உள்ள ஒவ்வொரு கலத்தினுள்ளும் சென்று நமக்குத்தேவையான சக்தியை
    வழங்கும். உருவாக்கப் படும் குளுக்கோசானது கலங்களின் உள்ளே செல்லுவதற்கு
    இன்சுலின் எனப்படும் ஹார்மோன் உதவி செய்கிறது. இந்த ஹோர்மோன் உடலில்
    குறையும் போது அல்லது அதன் தொழிற் பாடு குறையும் போது உருவாக்கப் படும்
    குளுக்கோசானது கலங்க்களினுள்ளே செல்லுவது குறைந்து குருதியிலே
    தேங்கிவிடும். இதுவே நீரழிவு நோய் எனப்படுகிறது.


    நீரழிவு நோய் எவ்வாறு பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது?

    கலங்க்களினுள்ளே செல்லாமல் குருதியிலே அதிகம் குளுக்கோசு தேங்குவதால் ,
    இது உடலின் நரம்பு, சிறு நீரகம், கண் , இருதயம் என உடலின் எந்த
    பாகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.


    நீரழிவு நோய் ஏற்பட்ட ஒருவருக்கு எந்த விதமான அறிகுறிகள் ஏற்படலாம்?


    • அளவுக்கதிகமான தாகம்
    • அளவுக்கதிகமான பசி
    • அளவுக்கதிகமாக சிறுநீர் கழித்தல்
    • உடல் நிறை சடுதியாக குறைதல்
    • காயங்கள் அடிக்கடி ஏற்படுவது அவை குணமடைய நீண்ட நாட்கள் எடுப்பது
    • பார்வை குறைபாடுகள்
    • உலர்ந்த , கடித்தன்மையான தோல்
    • கை கால்களின் உணர்ச்சித்தன்மை குறைந்து , மரத்துப்போன உணர்வு
    • அடிக்கடி தோல் , பிறப்புறுப்புக்களில் தொற்று நோய் ஏற்படுதல்


    எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் நீரழிவு நோய் ஏற்படலாமா?

    நிச்சயமாக!
    அநேகமான நீரல்ழிவு நோயாளிகள் மேற்சொன்ன அறிகுறிகள் எதுவும் இல்லாமல்,
    வழமையான மருத்துவச் சோதனைகளின் போதே கண்டுபிடிக்கப் படுகிறார்கள். ஆகவே
    நீங்கள் 35 வயதைத் தாண்டி விட்டால் மேலே சொன்ன அறிகுறிகள் வரும் வரை
    காத்திருக்காமல் , ஒருதடவை உங்களின் குருதியில் சீனியின் அளவை ஒருதடவை
    சோதித்து அறிவதே புத்தி சாலித்தனம்.


    நீரழிவு நோய் எந்தவிதமான பாதிப்புக்களை ஏற்படுத்தும்?

    உடலின் எந்தவொரு பகுதியையும் இந்த நீரழிவு நோய் பாதிக்கலாம்.
    இதயத்தில் மாரடைப்பு ஏற்படும் சந்தர்ப்பத்தை அதிகரிக்கும்

    மூளையில் பாரிசவாதம் ஏற்படும் சந்தர்ப்பத்தை அதிகரிக்கும்

    கால்களில் உணர்வுத் தன்மை குறைவதால் காயங்கள் ஏற்படுதலை அதிகரிக்கும்
    காயம் ஏற்பட்ட ஒருவருக்கு குறைந்த உணர்வுத்தன்மை காரணமாக வலி அதிகம்
    ஏற்படாது, இதன் காரணமாக அவர் காயத்தை பொருட் படுத்தாமல் விடுவதாலும்,
    காயம் மீண்டும் மீண்டும் தாக்கப் படுவதாலும் நீண்ட நாட்களுக்கு காயம்
    குணமடையாது.

    சிறுநீரகத்தை பழுதடையச் செய்யும்

    கண்களில் பார்வைத்தன்மையை குறைக்கும்,. குளுக்கோமா போன்ற கண் நோய்கள் ஏற்படும்.

    அதிகமான தொற்று நோய்கள் ஏற்படும்.

    குருதிக் குழாய்களை பாதித்து ரத்த ஓட்டத்தை குறைக்கும். குறிப்பாக
    கால்களில் ரத்த ஓட்டம் குறையும் போது வலி ஏற்படும். இந்த வழியானது
    நடக்கும் போது அதிகரித்து சற்று ஓய்வாகும் போது குறையும். இப்படி வலி
    உள்ளவர்கள் உடனடியாக வைத்தியரை அணுக வேண்டும்.நாட்பட்ட பின்பு கால்களை
    அகற்ற வேண்டிய நிலை கூட ஏற்படலாம்.
    இப்படி இன்னும் பல .....


    இந்த பாதிப்புக்களில் இருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்ளலாம்?

    இலகுவான ஒரே வழி உங்கள் சீனியின் அளவை கட்டுப்பாடாக வைத்திருப்பதே.
    நீங்கள் நீராழி நோயாளியாக இருந்தாலும் சீனியின் அளவை கட்டுப்பாடாக
    வைத்திருந்தாள் இந்த பாதிப்புக்கள் ஏற்படாமல் தப்ப்பித்துக் கொள்ளலாம் .


    எவ்வாறு சீனியைக் கட்டுப்பாடாக வைத்திருப்பது?

    வைத்திய ஆலோசனைப்படி உணவுப் பழக்க வழக்கங்களை பின்பற்றுதல்
    வைத்திய ஆலோசனைப்படி அனைத்து மருந்துகளையும் ஒழுங்க்காககப் பயன்படுத்துதல்
    உடற்பயிற்சி செய்தல்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: நீரழிவு நோய் என்றால் என்ன? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top