உடல் அழகிற்கு 20 அசத்தல் ஆலோசனைகள் - தமிழர்களின் சிந்தனை களம் உடல் அழகிற்கு 20 அசத்தல் ஆலோசனைகள் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, September 1, 2010

    உடல் அழகிற்கு 20 அசத்தல் ஆலோசனைகள்

    * ஒரு நாளைக்குக் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    *
    பீட்ரூட்டை சிறு துண்டு களாக நறுக்கி மிக்சியில் போட்டு பேஸ்ட் போல அரைக்க
    வேண்டும். அரைக்கப்பட்ட பீட் ரூட் பேஸ்ட்டை முகத்தில் பூசி 5
    நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் சுமார் 10
    நிமிடங் கள் கழித்து சோப்பை உபயோகித்தோ அல்லது கடலை மாவை உபயோகித்தோ முகம்
    கழுவ வேண்டும்.

    * சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து அதனுடன் 4
    அல்லது 5 துளி பாலைச் சேர்த்து கலக்க வேண்டும். இந்தக் கலவையை முகம்
    மற்றும் உடலில் பூசிக் கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து
    வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

    * மஞ்சள் தூள், சந்தனப்
    பொடி மற்றும் ஆலிவ் எண்ணை கலந்த கலவையை உடலில் பூசிக் கொள்ள வேண்டும்.
    சுமார் 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும்.

    * பாலை உபயோகித்து சருமத்தை மசாஜ் செய்ய வேண்டும். பாலின் ஈரப்பதம் சருமத்தை மிருதுவாக்குகிறது.

    * அறையில் எப்போதும் ஈரப்பதம் நிலவுமாறும், அறை வெப்ப நிலை அதிகமாக இல் லாதவாறும் பார்த்துக் கொண்டால் சருமம் உலர்ந்து போகாது.

    *
    வெந்நீரில் குளிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதில்லை. நீண்ட நேரம்
    `ஷவரில்` நிற்பது சருமத்துக்கு நல்லது. குளித்த பிறகு துண்டை வைத்து
    முரட்டுத் தனமாக உடம்பை துடைக்கக் கூடாது. மென்மையாக உடம்பின் மீது துண்டை
    ஒற்றி எடுக்க வேண்டும்.

    * வைட்டமின் `ஏ` மற்றும் `சி` அதிகமுள்ள உணவை உண்டு வந்தால் சருமத்துக்கு நல்லது.

    *
    கேரட்டைத் துருவி அவிக்க வேண்டும். பின் அதை வெளியே எடுத்து சருமத்தில்
    பூசிக் கொள்ள வேண்டும். இதனால் அழகான, வழுவழுப்பான சருமம் தோன்றும்.

    * பாலும், எலுமிச்சை சாறும் கலந்த கலவையை முகத்தில் பூசி இயற்கையான முறையில் `பிளீச்` செய் யலாம்.

    *
    வெயில் நேரத்தில் வெளியே செல்வதால் முகம் கருத்து விடும். இதைத் தடுக்க,
    வெளியே போய் வந்தவுடன் வெள்ளரிக்காய் மற்றும் தக்காளிச் சாற்றை சம அளவில்
    கலந்து முகத்தில் பூசிக் கொள்ள வேண் டும். 10 நிமிடங்கள் கழித்தே குளிக்க
    வேண்டும்.

    * கடுகு எண்ணையை உடலில் பூசி 5 நிமிடங் களுக்குத்
    தேய்க்க வேண்டும். அதற்குப் பிறகு கடலை மாவு அல்லது சோப்பை உபயோகித்துக்
    குளிக்க வேண்டும்.

    * கோதுமை மாவுடன் தயிரைக் கலந்து சருமத்தின் மீது பூசிக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து குளியுங்கள்.

    *
    ரோஜா இதழ்களை அரைத்து அதனுடன் பாலாடையைக் கலந்து சருமத்தின் மீது பூசிக்
    கொள்ள வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும்.

    *
    உடலில் `புளோரின்` பற்றாக் குறையால் சருமம் சொரசொரப்பாக மாறுகிறது. உணவை
    சமைத்து உண்பதால் உணவில் இருக்கும் `புளோரின்` சத்து போய்விடுகிறது. இதைத்
    தடுக்கப் பச்சைக் காய்கறிகள், பழங்களை சாப்பிடுவது நல்லது. ஆட்டுப் பால்,
    வெண்ணை, முட்டைக்கோஸ் போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள
    வேன்டும்.

    * `சோடியம்` பற்றாக்குறையால் சருமத்தில் சுருக்கங்கள்
    ஏற்படுகிறது. இதனால் சருமம் பிசுபிசுவென்று ஆகிறது. வெள்ளரிக்காய்க்கு
    `சோடியம்` பற்றாக் குறையைத் தடுக்கும் சக்தி உண்டு. மேலும், கோடை
    காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் உடல் ஜில்லென்று குளுமையாகி
    விடுகிறது.

    * சருமத்தின் மீது சொறி சொறியாக வருவது `சிலிக்கான்`
    பற்றாக் குறையின் அறி குறியாகும். பார்லி, தக்காளி, ஸ்டிராபெர்ரி பழம்
    போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினை ஏற்படாது.

    * `குளோரோபில்` பற்றாக்குறையால் தோல் உறியும். இதைத் தடுக்க கோதுமை மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    *
    பாலாடையுடன் கடலை மாவை சேர்த்து கண், புருவம் மற்றும் உதடுகளைத் தவிர்த்து
    முகத்தின் இதர பகுதிகளில் பூச வேண்டும். 5 நிமிடங்கள் கழித்துக்
    குளித்தால் சருமம் மென்மையாக மாறும்.

    * நீரில் தேனைக் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் சருமம் மினுமினுப்பாக மாறும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    1 comments:

    prabhadamu said... September 1, 2010 at 4:01 PM
    This comment has been removed by a blog administrator.
    Item Reviewed: உடல் அழகிற்கு 20 அசத்தல் ஆலோசனைகள் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top