- தமிழர்களின் சிந்தனை களம் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, June 20, 2012

    கர்ப்பமாக இருக்கும்போது இரும்புச் சத்து மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்கிறார்களே... உண்மையா டாக்டர்?''
     http://seacloud-2.appspot.com/images/baby2.gifஉண்மை அல்ல. இரும்புச் சத்துக்கும் குழந்தையின் நிறத்துக்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது. அதேபோல, இரும்புச் சத்து என்பது இரும்பு நிறத்தில் - அதாவது கறுப்பு நிறத்தில்தான் இருக்கும் என்கிற எண்ணமும் முற்றிலும் தவறானது. அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அத்தை, மாமா... இப்படிக் குழந்தையின் உறவினர்கள் எந்தவிதமான மரபுப் பண்புகளோடு, என்ன நிறத்தில் இருக்கிறார்களோ, அதே நிறத்தில்தான் குழந்தையும் பிறக்கும். பொதுவாகக் கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் தன்னுடைய ஐந்து முதல் ஏழு மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 100 இரும்புச் சத்து மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ஆனால், நம்முடைய நாட்டைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை போதாது என்றும் இன்னும் கூடுதலாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் மகப்பேறு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
    நம்முடைய பாட்டிகள், கொள்ளுப்பாட்டிகள் எல்லாம் எந்த இரும்புச் சத்து மாத்திரையைச் சாப்பிட்டார்கள்? அவர்களுக்கு எல்லாம் குழந்தைகள் நன்றாகத்தானே பிறந்தன?’ என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். அந்தக் காலத்தில் நம் பாட்டிகள் சமைக்கப் பயன்படுத்திய பாத்திரங்களில் பெரும்பாலானவை இரும்பினால் செய்யப்பட்டிருக்கும். அதேபோல, இனிப்புக்காகப் பனை வெல்லம், கருப்பட்டி போன்றவற்றைப் பயன்படுத்தினார்கள். மேலும், கேழ்வரகையும் முருங்கைக் கீரையையும்தாராளமாக உணவில் சேர்த்துக்கொண்டார்கள். அதனால், அவர்களுக்குத் தேவையான இரும்புச் சத்து உணவில் இருந்தே கிடைத்துவிட்டது.  ஆனால், தற்போது சமைப்பதற்காக நான் ஸ்டிக் மற்றும் எவர்சில்வர் பாத்திரங்களைத்தான் பயன்படுத்துகிறோம். அதேபோல, பனைவெல்லம், கருப்பட்டி இவற்றை எல்லாம் விட்டுவிட்டு, வெள்ளைச் சர்க்கரையைப் பயன்படுத்துகிறோம். எனவேதான் இரும்புச் சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி இரும்புச் சத்து மாத்திரைகளைச் சாப்பிடுங்கள். உங்கள் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பயப்படத் தேவை இல்லை.''
    ஜெ.ரமேஷ், நாகர்கோவில்
    கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும் மாணவன் நான். காபி, டீ குடிக்கும்போது என் கைகள் நடுங்குகின்றன. சாதாரணமாக இருக்கும்போது நடுங்குவது இல்லை. சில சமயங்களில் என் சுண்டுவிரல் மட்டும் தனியாகத் துடிக்கிறது. இது நரம்புத் தளர்ச்சியாக இருக்கலாம்   என்று நண்பர்கள் பயமுறுத்துகிறார்கள். உண்மையா? இது எதனால் ஏற்படுகிறது? இதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்குமா? இதற்கான சிகிச்சை என்ன?''
    டாக்டர் முருகன், நரம்பியல் நிபுணர்
    உங்களுக்கு உள்ள பிரச்னையை நரம்புத்தளர்ச்சி என்று முழுவதுமாகச் சொல்லிவிட முடியாது. அதிகமாக காபி குடிப்பவர்களுடைய மூளைக்குச் செல்லும் நரம்பின் தூண்டுதல் சக்தி அதிகமாவதால், இதுபோன்று கைகள் நடுங்க வாய்ப்பு உண்டு. சுண்டுவிரல் மட்டும் சில சமயம் நடுங்குவதற்குக் காரணம் புகைபிடிப்பதாகவோ அல்லது மது அருந்துவதாகவோகூட இருக்கலாம். ஒருவேளை எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவராகத் தாங்கள் இருந்தாலும்கூட மரபியல்  காரணங்கள் மூலமும் இப்படி ஏற்படலாம். தவிர, ரத்தத்தில் அதிக அளவில் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தால், இது நரம்புத்தளர்ச்சியாக இருக்க வாய்ப்பு உண்டு.
    நரம்புத் தளர்ச்சி இருந்தால் உடலில் ரத்த ஓட்டம் பாதிக்கும். இதன் பாதிப்பு கை, கால்களில்தான் அதிகமாகத் தெரியும். நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள் டீ, காபி குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது!''
    ம.சாந்தினி, ராமேஸ்வரம்.
    ''எட்டுமாதக் குழந்தைக்குத் தாய் நான். என் மார்புக் காம்பைச் சுற்றி பொரிப்பொரியாகப் புண்ணாக இருக்கிறது. இதனால், குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போது வலி உயிர் போகிறது. மருந்து தடவலாம் என்றால், குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. இதற்கு ஒரு வழி சொல்லுங்களேன்.''
    டாக்டர் டி.ஜெயஸ்ரீ, மகப்பேறு நிபுணர்
    ''எட்டு மாதங்கள் வரை குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் தங்களை முதலில் பாராட்டுகிறேன். குழந்தையைப் பெற்றெடுத்த உடனேயே, மகப்பேறு மருத்துவர்கள் தாய்க்குத் தாய்ப்பால் புகட்டும் முறையைச்  சொல்லிக் கொடுப்பார்கள். நிறைய தாய்மார்கள் மார்புக் காம்பை மட்டுமே உறிஞ்சிக் குடிக்குமாறு குழந்தையைப் பழக்கப்படுத்துகிறார்கள்; இது சரியான முறை அல்ல. காம்பைச் சுற்றிலும் பழுப்பு நிறத்தில் வட்டமாக இருக்கும் பகுதிக்கு 'ஆரியோலா’ (கிக்ஷீமீஷீறீணீ) என்று பெயர். அதில்தான் பால் சுரப்பிகள் முடிவடைகின்றன. எனவே, குழந்தை அந்தப் பகுதியில் வாய் வைத்து உறிஞ்சினால்தான் நன்றாகப் பால் சுரக்கும். இப்படிச் சரியான முறையில் தாய்ப்பால் ஊட்டினால், கண்டிப்பாக வெடிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் வராது. இதற்குச் சில மருத்துவக் காரணங்கள் இருக்கின்றன.
    தவறாகப் பால் ஊட்டும் முறையைப் பின்பற்றி இருந்தால்தான் ஆரியோலா பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டு, அதில் கிருமித்தொற்று உண்டாகும். இதனால்தான் பொரிப்பொரியாகவோ, கட்டிகளாகவோ புண்கள் உருவாகி வலி ஏற்படுகிறது. இதனைக் குணப்படுத்தக் களிம்புகளும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளும் உள்ளன. டாக்டரின் ஆலோசனையின்படி இவற்றைப் பயன்படுத்தலாம். குழந்தை பால் குடிப்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்தக் களிம்பைத் தடவிக்கொள்ள வேண்டும். குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது, மார்பை வெந்நீரால் சுத்தம் செய்துவிட்டால் எந்தப் பிரச்னையும் வராது. புண்ணும் விரைவில் ஆறிவிடும். பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் பட்சத்தில், 'நிப்பிள் ஷீல்டு’ எனப்படும் ரப்பர் உறையை மார்புக் காம்பில் பொருத்தியும் குழந்தைக்குப் பால் கொடுக்கலாம்.''
    க.சுபாஷிணி, அரக்கோணம்
    ''பொதுவாக எனக¢கு சள¤ப் பிடிக்காது. தும்மலும் அதிகம் வராது. ஆனால், எப்போதாவது  தும¢மல¢ வந்துவிட்டால் நாள¢ முழுவதும¢ தொடர¢ந்து தும¢ம¤க¢கொண¢டே இருக¢க¤றேன¢. தலை பாரமாக¤வ¤டுக¤றது. மறுநாளே தும¢மல¢ குறைந¢துவ¤டுக¤றது. இப¢படித் தொடர¢ந¢து தும¢மல¢ வருவதற¢கு என¢ன காரணம¢?''
    டாக்டர் கீதா லைசாண்டர், அலர்ஜி மற்றும் ஆஸ்துமா நிபுணர்.
    ''ஒருவருக்கு ஏற்றுக்கொள்ளும் ஒரு பொருள் மற்றொருவருக்கு ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். இதுவே ஒவ்வாமை. சுற்றுப்புறத்தில் உள்ள பல்வேறு பொருட்களால் இந்த ஒவ்வாமை ஏற்படலாம்.
    சிகரெட் மற்றும் ரசாயனப் புகை, தூசு, வாசனைத் திரவியங்கள், பெயின்ட், பூச்சிகொல்லிகள் போன்றவற்றின் நெடி, ஒரு சில பூஞ்சைகள், பூக்களுடைய மகரந்தம்... நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளின் முடி மற்றும் கழிவுகள், குளிர்ந்த காற்று, பனி, தலையணை, படுக்கை விரிப்பு, கதவு, ஜன்னல் திரைச்சீலை, அலங்காரப் பொருட்கள், குழந்தைகள்  ஃபர் டாய்ஸ் (Fur toys) ஆகியவற்றில் இருக்கும் 'டஸ்ட் மைட்’ எனப்படும் மிக நுண்ணியக் கிருமிகள், காற்றில் உள்ள நுண்ணியத் துணுக்குகள் அல்லது தூண்டிகள் (Triggers) போன்றவற்றால் நம் சுவாசத்தில் ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டுத் தும்மல் வருகிறது.
    நீங்கள் சொல்லும் அறிகுறிகளைப் பார்க்கும்போது உங்களுக்கு ஒவ்வாமை (Allergy)இருப்பது தெரிகிறது. இந்த ஒவ்வாமையால் ஏற்படும் தும்மல் நீண்ட நாட்களாக இருந்தால், சைனஸ் (Sinusitis) பாதிப்பு வந்து, தலைவலி ஏற்படலாம்.
    முதலில் இது ஒவ்வாமைதானா என்று மருத்துவர் மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும். அதன் பிறகு தடுப்பு மருந்து (Preventive medicine) எடுத்துக்கொள்ளலாம். 'ஸ்ப்ரே’ மூலம் மூக்கு வழியாகச் செலுத்தப்படும் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளலாம். வெந்நீர் ஆவி பிடித்தால் தலைபாரம் நீங்கித் தலைவலி குறையும். இவை உடனடி நிவாரணம் மட்டுமே தரும்.
    பின்விளைவுகள் இல்லாமல் தும்மலை முழுமையாகக் கட்டுப்படுத்த தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆறு மாதங்களில் இருந்து இரண்டு வருடங்கள் வரை சிகிச்சைக்குத் தேவைப்படலாம்.  எனவே, ஒவ்வாமை நிபுணர் மற்றும் காது, மூக்கு, தொண்டை நிபுணரைச் சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெறுதல் நல்லது.'
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top