சளி பிடித்தால்...(10 கட்டளைகள்) - தமிழர்களின் சிந்தனை களம் சளி பிடித்தால்...(10 கட்டளைகள்) - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Sunday, January 26, 2014

    சளி பிடித்தால்...(10 கட்டளைகள்)

    சளி பிடித்தால்...(10 கட்டளைகள்)

    www.puthiyatamil.org

    -
    நல்ல தூக்கம், நல்ல சாப்பாடு ஆகிய இரண்டும்
    சளியைத் தடுக்க உதவுகின்றன. 

    ஆரஞ்சு, தக்காளி, மற்றும் வைட்டமின் 'சி' 
    அடங்கியுள்ள மற்ற பழங்களையும் சாப்பிடுவது 
    நல்லது
    -
    2) பரவலாக நம்பப்படுவதைப்போல், சளி குளிரில்
    அல்லது தண்ணீரில் நனைவதால் ஏற்படுவதில்லை.
    ஆனால் தண்ணீரில் நனைந்தால் சளி மோசமடையக்
    கூடும்

    -
    3) சளியுள்ளவர் தும்மும்போது வைரஸ் கிருமிகள்
    காற்றில் கலந்து மற்றவர்களையும் தொற்றுகிறது
    -

    4) தனக்கு ஏற்பட்ட சளி மற்றவர்களுக்கும் பரவாமல் 
    இருக்க சளி கொண்டவர் தனியாகச் சாப்பிட்டு, தனியாகத்
    தூங்க வேண்டும்

    குழந்தைகளிடமிருந்து விலகியிருக்க வேண்டும்
    -
    5) தும்பும்போதும் இருமும்போதும் தம்முடைய 
    மூக்கையும் வாயையும் பொத்திக்கொள்ள வேண்டும்

    6) மூக்கை அழுத்திச் சிந்துவது காதுவலியை ஏற்படுத்தலாம்.
    எனவே மூக்கைச் சிந்தாதீர்கள். வெறுமனே துடைத்து
    விடுங்கள்.
    குழந்தைகளுக்கும் இவ்வாறு செய்யக் கற்றுக் கொடுங்கள்
    -
    7) அழுத்திச் சிந்துவதால் காதுவலியும் பீனிசம் போன்ற 
    நோய்களும் ஏற்படலாம்
    -
    8) ஆவி பிடிப்பது மூக்கடைப்பு குணமாக உதவலாம்
    -
    9) மூக்கடைப்புக்கான சொட்டு மருந்துகளை மூன்று
    நாட்களுக்கு மேல், ஒரு நாளுக்கு மூன்று தடவைகளுக்கு
    மேல் பயன்படுத்தாதீர்கள்
    -
    10) தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துக்கொண்டு நாசித்
    துவாரத்தில் இரண்டு அல்லது மூன்று சொட்டு விடவும்.
    ஓரிரு நிமிடங்கள் அப்படியே தலையைச் சாய்த்து 
    வைதிருக்கவும். பின்னர் தலையை மறுபக்கமாகச் சாய்த்து 
    நாசியின் அடுத்த துவாரத்திலும் சொட்டு மருந்தை
    விடவும்
    -
    ========================================
    நன்றி: மல்லிகை - மார்கழி 2013
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: சளி பிடித்தால்...(10 கட்டளைகள்) Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top