பிரசவம்-குழந்தை பிறப்பு- 2- செயற்கை முறை - தமிழர்களின் சிந்தனை களம் பிரசவம்-குழந்தை பிறப்பு- 2- செயற்கை முறை - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Friday, July 4, 2014

    பிரசவம்-குழந்தை பிறப்பு- 2- செயற்கை முறை

    பிரசவம்-குழந்தை பிறப்பு- 2- செயற்கை முறை

    ரோமானிய அரசர் சீசர் (Julius Caesar) பிறப்புக் காரணமாக Cesarean என அழைக்கப்படுகிறது.

    Enlarge this image

    CS-C-section (Cesarean section), -செயற்கைப் பிரசவம்- அறுவை சிகிச்சை காரணமாக உடனடியான தாய்மை உணர்வு கிடைப்பதில்லை. ஆயினும் குறிப்பிட்ட நேரத்தில் பிரசவம் நிகழவும்,குழந்தை பெரிதாக(macrosomia ) அல்லது இரட்டைக் குழந்தை எனும் போது சுலபமாகியும் விடுகிறது. 

    அதே சமயம் HIV போன்ற நோய் இருந்தால், குழந்தையைப் பாதிக்காமல் இருக்க கவனம் தேவை என்பதாலும் இந்த முறை அறிவுறுத்தப்படுகிறது.அறுவை சிகிச்சை என்பதால்,சுகமாகி வீட்டிற்கு செல்ல அதிக நாட்கள் எடுப்பதும்,காயம் ஆற நாட்கள் எடுப்பதும்,காயத்தில் தொற்றுகள் வருவதற்கும்,தாய்ப்பால் தாமதமாக கொடுக்க வேண்டிய நிலையும்,உடனடியாக குழந்தையுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாமையும் இந்த முறையால் ஏற்படுகிறது.

    சில வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை CS ஏற்பட்டால், திரும்ப சாதாரண பிரசவம் என்பது நடக்க முடியாது என்று நம்பினார்கள்.. ஆனால் தற்போது அந்த நிலை மாறி, vaginal birth after cesarean (VBAC) ஏற்படுவது சாத்தியமே! தொடர்ந்து அதே CS செய்வது நல்லதல்ல என்ற கருத்தும்,நிலையும் இருந்து வருகிறது.

    CS அவசர நிலையில் மட்டும் பரிந்துரை செய்யப்படுகிறது. பல தாய்மார்கள் VBAC ஐ விரும்புகிறார்கள். காரணம் CS ஐ விட VB -natural childbirth-, எப்போதாவது மிகக் குறைந்த விளைவுகளை மட்டுமே கொடுக்கிறது.

    ஆனாலும் சமீப காலங்களில் செயற்கை முறைப் பிரசவம் அதிகரித்து வருவதையும் காண முடிகிறது.

    வலியற்ற பிரசவம் காரணமாக தாய்க்கு மனத்தில் ஒரு அமைதி கிடைப்பது என்னவோ உண்மைதான்.ஆனால் இயற்கைப் பிரசவத்தில் சிரமங்கள் வரும் போது, சில சமயம் குழந்தையை வெளியே எடுக்க forceps அல்லது vacuum extraction பாவிக்கப்படுகிறது. இது குழந்தைக்கு சில சிரமங்களை தருகிறது.

    உள் உறுப்புகள் சில சமயம் சேதமடைய, anesthesia காரணமாக சில சிக்கல்கள், குருதி இழப்பு,அறுவை சிகிச்சையில் இருந்து மீள சில நாட்கள் எடுப்பது,அதிக நாட்கள் மருத்துவ நிலையத்தில் இருக்க வேண்டிய அவசியம்,அறுவை சிகிச்சையால் ஏற்படும் தழும்பு,அடுத்த பிரசவத்தில் பிரச்சனை,uterine infection,குருதி இழப்பு தொடருமானால் uterus -womb-  (hysterectomy) நீக்க வேண்டிய சூழ்நிலை,அப்படி எடுத்தால் குழந்தை பெற முடியாத நிலை இப்படியான சில குறைபாடுகள் ஏற்படலாம். 

    குழந்தை பிறந்த பின்னரும் வயிறு பெரிதாக பலருக்கு இருப்பதும்,வயிறு குறைய நாட்கள் எடுப்பதும் கவனிக்கப்பட்டுள்ளது.
    வழக்கமா குழந்தையை வெளிய எடுத்த பின், கருப்பை சுருங்கி பழைய படி ஆகிவிடும். அப்பறம் தான் தையல் போடுவாங்க. கருப்பை மூடாது குருதிப் போக்கு தொடருமானால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.சில சமயம் உள்ளே போடும் தையல் ஆறாமல் தொற்று ஏற்படலாம்.உடனே வலி தெரியாவிட்டாலும்,தையல் போட்ட இடத்தில் வலி, பிரச்சனைகள் ஏற்படலாம். epidural - local anaesthetic காரணமாக பின் விளைவுகள் ஏற்படலாம். குழந்தைக்கு தொப்புல் கொடி விழுவது பொதுவா 5 - 15 நாளில் விழும். அது ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும்.

    குழந்தை கடைசி வாரத்தில் (37-39) தான் தலை கீழே செல்வதால்,மருத்துவர் இதுபற்றிக் முன்னரே கூறுவார்.

    நீளமாகவே (longitudinal) இடமிருந்து வலமாக வெட்டப்பட்டு இந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்டாலும்,மிக அவசர சமயத்தில் மட்டும் குறுக்காக (horizontal) மேலிருந்து கீழாக, வெட்டப்படுகிறது.HIV,இதய நோய்,ஒன்றுக்கு மேற்பட்டு குழந்தைகள்,குருதி உயரழுத்தம்,placenta ,umbilical cord பிரச்சனைகள், குழந்தையின் இதயத் துடிப்பு போன்ற காரணங்களுக்காக செயற்கை முறை C-section அறிவுறுத்தப்படுகிறது.

    எச்சரிக்கை. இந்திய மருத்துவ மனை ஒன்றில் செய்யப்பட்ட CS முறை இது. கழுத்தில் கொடி சுற்றிய நிலையில்  forceps பாவித்திருக்கிறார்கள்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: பிரசவம்-குழந்தை பிறப்பு- 2- செயற்கை முறை Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top