பெற்றோர்களே நல்லெண்ணெய் குளியல் குழந்தைகளுக்கு கூடாது! - தமிழர்களின் சிந்தனை களம் பெற்றோர்களே நல்லெண்ணெய் குளியல் குழந்தைகளுக்கு கூடாது! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Saturday, July 21, 2012

    பெற்றோர்களே நல்லெண்ணெய் குளியல் குழந்தைகளுக்கு கூடாது!

    பெற்றோர்களே நல்லெண்ணெய் குளியல் குழந்தைகளுக்கு கூடாது!
    http://www.dimensionsinfo.com/wp-content/uploads/2010/03/Baby-Bath.jpg
    பிறந்த குழந்தைகளுக்கு தலையில் நல்லெண்ணெய் தேய்க்ககூடாது. தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி தேய்க்கனும். குழந்தை தலையிலும் உடம்பிலும் தேய்க்க தேவையான அளவு சுத்தமான தேங்காய் எண்ணெயைக் காய வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய்பால் விடுங்க. அது படபடன்னு கொதிச்சு அடங்கினதும் அதில் 1 டேபிள் ஸ்பூன் கஸ்துரி மஞ்சள் பொடியை போட்டு இறக்குங்க. பின்னர் அந்த எண்ணையை குந்தைக்கு பயன்படுத்துங்க.

    குழந்தைக்கு 1 வயது வரும் வரை இந்த எண்ணையை தான் தேய்க்கனும். ஆனால் இந்த எண்ணெய் நல்லா போகுற மாதிரி தேய்ச்சி குளிப்பாட்டனும். இப்படி செய்து வந்தால் குழந்தைக்கு உடம்பில் சொறி சிரங்குன்னு எதுவும் வராமல் மேனி பட்டு போல் இருக்கும். பொதுவாக குழந்தைகளுக்கு நான்கு வயது வரை தலைக்கு தேங்காய் எண்ணெய் வைத்து குளிப்பாட்டுவது தான் உசிதம். நல்லெண்ணெய் குளியல் குழந்தைகளுக்கு கூடாது.

    முன்னெல்லாம் ப்ரெஷ்ஷா தேங்காய் பால் எடுத்து காய்ச்சி அதிலிருந்து எண்ணை எடுத்து குழந்தைகளுக்கு தேய்ச்சி குளிப்பாட்டுவாங்க.. இப்பவும் கேரளாவுள அப்படிதான் செய்யறாங்க. ஆனா இந்த காலத்துல உடனுக்குடன் எண்ணெய் எடுக்குறதுலாம் முடியுற காரியமா? அதுக்கு பதிலா நல்ல தேங்காய் எண்ணெய்யை இரண்டு கரண்டி அளவுக்கு எடுத்து சுட வைத்து அதுல கால் கரண்டி தேங்காய்பாலும் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளும் போட்டா தேங்காய் பால் சடசடங்கற சத்தத்தோட முறிஞ்சு ப்ரெஷ் தேங்காய் எண்ணையை கமகமன்னு மணக்கும்.

    இதை குழந்தையோட தலை உடம்புன்னு ழுழக்கப்பூசி குளிப்பாட்டினா ஜோரா இருக்கும். எண்ணைபசை போக சீயக்காயெல்லாம் போக்கூடாது.. பாசிப்பயறு அல்லது கடலைமாவு தேய்ச்சு குளிப்பாட்டினாலே எண்ணைபசை போயிடும். இப்படி குளிக்க வைச்சா குழந்தைக்கு கரப்பான் சொறிசிரங்கு மாதிரியான சரும வியாதிகள் எதுவும் பக்கதுலேயே வராது. வெயில் காலத்துல ஒரு பக்கெட் தண்ணியிலேயே

    குழந்தைகள் தலைக்குக் குளிக்கும் நீரில் வேப்பிலை போட்டுக் குளிப்பாட்டுவது நல்லது. மாதமொரு முறை வெந்தயம் 1 ஸ்பூன், மிளகு அரை ஸ்பூன், வேப்பிலை 4, துளசி 4 ஆகியவற்றை அரைத்துத் தலையில் தேய்த்து 5 நிமிஷம் ஊறியபின் குளிப்பாட்டுவது சூட்டைத் தணிக்கும். கிருமிகள் அணுகாமல் தடுக்கும்.

    பிறந்த குழந்தைகளுக்கு வேம்பின் கொழுந்து இலை சிறிதளவு, 2 மிளகு, சீரகம் இவைகளை மை போல் அரைத்து, அதில் சுண்டைக்காயளவு வெந்நீரில் கலக்கி, எண்ணெய் ஸ்நானம் முடிந்ததும் கொடுத்துவர, நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பார்கள்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: பெற்றோர்களே நல்லெண்ணெய் குளியல் குழந்தைகளுக்கு கூடாது! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top