உணவை குறைத்து கொண்டால் புற்று நோய் ஏற்படாது - தமிழர்களின் சிந்தனை களம் உணவை குறைத்து கொண்டால் புற்று நோய் ஏற்படாது - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, July 25, 2012

    உணவை குறைத்து கொண்டால் புற்று நோய் ஏற்படாது

    உணவை குறைத்து கொண்டால் புற்று நோய் ஏற்படாது: இங்கிலாந்து சேரிட்டி மற்றும் டபிள் யூ.சி.ஆர்.இ. ஆகிய அமைப்புகள் வெளியிட்டுள்ளன.http://arivuu.files.wordpress.com/2011/10/uppu.jpg

    புற்றுநோய் பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாப்பது எப்படி? என்பது குறித்த விளக்கங்களை இங்கிலாந்து சேரிட்டி மற்றும் டபிள் யூ.சி.ஆர்.இ. ஆகிய அமைப்புகள் வெளியிட்டுள்ளன.

    அதில் உணவுகளில் உப்பை குறைத்து சாப்பிடுவதே அதற்கு சிறந்த மருந்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அதிக உப்பு சேர்ப்பதன் மூலம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

    இதன்மூலம் இருதய நோய்கள், பக்கவாதம் போன்றவை ஏற்படுகிறது. அதனுடன் வயிற்றில் புற்றுநோய் உருவாகவும் இது வழிவகை செய்கிறது. மக்கள் நாள் ஒன்றுக்கு தங்கள் உணவில் 8.6 கிராம் உப்பு சேர்க்கின்றனர். இது அதிக அளவாகும். அதை 6 கிராம் ஆக குறைக்க வேண்டும் என உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியகம் தெரிவித்துள்ளது.

    எனவே பொதுமக்கள் தங்கள் உணவு வகைகள் மற்றும் ரொட்டி போன்றவற்றில் குறைந்த அளவு உப்பு சேர்த்து அதன் மூலம் புற்றுநோயில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: உணவை குறைத்து கொண்டால் புற்று நோய் ஏற்படாது Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top