வெந்நீர் குடித்தால் என்னென்ன உபாதைகள் தீரும் படிச்சுபாருங்க…… - தமிழர்களின் சிந்தனை களம் வெந்நீர் குடித்தால் என்னென்ன உபாதைகள் தீரும் படிச்சுபாருங்க…… - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Saturday, July 7, 2012

    வெந்நீர் குடித்தால் என்னென்ன உபாதைகள் தீரும் படிச்சுபாருங்க……

    வெந்நீர் குடித்தால் என்னென்ன உபாதைகள் தீரும் படிச்சுபாருங்க……
    http://www.hatfindo.com/wp-content/uploads/2010/09/drinking-water-danger.jpg
    ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை…. மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!

    வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச்சொல்கிறார்கள்.

    காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர் களா? எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ”அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத் தானே கொடுக்கிறார்கள்” என்று புலம்புவது கேட்கிறது!)

    உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற் கண்டு போட்டு குடியுங்கள். இதன்மூலம் பித்தத்தினால் வரும் வாய்க் கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்து விட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்து விடும்.

    எங்கேயாவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர் தான். பெரிய பிளாஸ் டிக் வாளியில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பதுபோல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால்வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகி விடும்.

    மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிடும்!

    வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.

    வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி.

    ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெது வெதுப்பான வெந்நீர் குடியுங்கள். அதுபோலவே,ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்த ல், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாவதையும் எமது அனுபவத்திலே கண்டிருக்கின்றோம் .

    இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங் களைக் கழுவும் போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசு பிசுப்பு தன்மை இல்லாமல் பளிச் சென்று சுத்தமாகும்.

    அதுபோலவே தரை துடைக்கும்போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்!

    வெந்நீரின் மஹாத்மியம் லிஸ்ட் போட்டு மாளாது… என்னது?! வெந்நீருக்கு இனி உங்கள் வீட்டில் தனியாக ஒரு பெரிய பாத்திரமே போடப் போகிறீர் களா…? குட் குட்!
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: வெந்நீர் குடித்தால் என்னென்ன உபாதைகள் தீரும் படிச்சுபாருங்க…… Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top