முளைகட்டிய பயறு பச்சடி - தமிழர்களின் சிந்தனை களம் முளைகட்டிய பயறு பச்சடி - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Sunday, October 19, 2014

    முளைகட்டிய பயறு பச்சடி


    பச்சை பயறு தானியத்தை ஊற வைத்து, முளைகட்டிய பின்பு சுவையான பச்சடி தயார் செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    பச்சை பயறு- 1 கப்,
    கொத்தமல்லி - இலை,
    தேங்காய் துருவல் - தேவையான அளவு,
    கடுகு - அரை தேக்கரண்டி,
    உளுந்தம் பருப்பு மற்றும் எலுமிச்சம் பழச்சாறு - சிறிதளவு,
    உப்பு - தேவைக்கு
                                
    செய்முறை:-

    * பச்சைபயறை இரவில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் தண்ணீரை வடிகட்டிவிட்டு, ஒரு துணியில் கொட்டி கட்டி வைக்கவும்.

    * அதற்கு அடுத்த நாள் காலையில் பார்த்தால், பயறு முளைகட்டி இருப்பதை அறியலாம். அதை எடுத்து பச்சடி தயார் செய்ய வேண்டும்.

    * முளைகட்டிய பயறுடன் தேங்காய் துருவல், கொத்தமல்லி இலை சேர்க்க வேண்டும்.

    * பின்பு கடுகு, உளுந்தம் பருப்பு கொண்டு தாளித்து, எலுமிச்சம் பழச்சாற்றை கலக்கவும்.

    * தேவைக்கு ஏற்ப உப்பு கலந்தால், சுவையான பச்சடி தயார் ஆகிவிடும்.

    * மிகவும் சத்தான உணவு வகையில் இதுவும் ஒன்று ஆகும். 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: முளைகட்டிய பயறு பச்சடி Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top