சைனஸ் தொல்லையா? கவலை இல்லை! - தமிழர்களின் சிந்தனை களம் சைனஸ் தொல்லையா? கவலை இல்லை! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Saturday, April 12, 2014

    சைனஸ் தொல்லையா? கவலை இல்லை!


    சைனஸ் பிரச்னையை கவனிக்காமல் விட்டால், மூக்கின் இரண்டு பக்கங்களிலும் உள்ள சிற்றறைகளில் தேங்கிய நீர், மூளை வரை சென்று, மூளைக் காய்ச்சல் வர வாய்ப்பு ஏற்பட்டு விடும். நவீன மருத்துவ சிகிச்சைகள் உள்ளதால், மக்கள் பயப்படத் தேவையில்லை. வீடுகளில், 
    மின் விசிறிகளில், குளிர்சாதன இயந்திரங்களில், துாசி தேங்காமல் பார்த்துக் கொண்டால், மூக்கில் ஒவ்வாமை ஏற்படாமல் சைனசிலிருந்து தப்பிக்கலாம்

    1. சைனஸ் என்றால் என்ன?
    நம் மூக்கைச் சுற்றி, எலும்புகளில் துளைகள் உள்ளன. இவற்றை, சைனஸ் அறைகள் என்கிறோம். புருவத்தின் மேல் நெற்றியில், 'பிரன்டனல்' என்ற அறைகளும், சற்று கீழே, 'எத்மாய்டு' அறைகளும், மூக்கின் இருபுறமும் கன்னத்தில், 'மேக்சிலரி' என்ற, சிற்றறைகளும் உள்ளன. இந்த சிற்றறைகள், காற்றால் நிரப்பப்பட்டிருக்கும். இவற்றின் ஏதாவது ஒரு அறையில், நீர் அல்லது சளி தங்கிய பின், சில காரணங்களால், அந்த அறை வாசல் அடைத்துக் கொள்வதால், சைனஸ் பாதிப்பு ஏற்படுகிறது.

    2. இதன் அறிகுறிகள் என்ன? மூக்கடைப்பு ஏற்படுவது ஏன்?
    தலை பாரமாக இருத்தல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், அதிக தும்மல், தலைவலி ஆகியவை முக்கிய அறிகுறிகள்; முற்றிய நிலையில் தொண்டை வலியும் இருக்கும். சிற்றறைகளில் இருந்து வெளியே வர வேண்டிய நீர், சளியாக மாறி, கட்டியாக அடைத்துக் கொள்வதால், மூக்கடைப்பு, மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. ஒரு வாரம், மருந்து, மாத்திரை சாப்பிட்டால், சரியாகி விடும். தொடர்ந்து சளி இருக்குமானால், காது, மூக்கு, தொண்டை நிபுணரை சந்திப்பது நல்லது.

    3. சைனஸ் வந்தால் தீர்ப்பது எப்படி?
    சளி பரிசோதனை செய்து, என்ன பாதிப்பு என கண்டறிந்து, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் நீட்டித்தால், எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்து, 'சைனஸ்' அடைப்பை சரி செய்யலாம்.
    ஒரு சில நேரங்களில், சளி, கட்டியாகி விடும். மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியாது. இதற்கு, அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வரும். இதில், 'எண்டோஸ்கோபி' முறையில், அறுவைச் சிகிச்சை செய்து, சளி கட்டியை அகற்றி விடலாம்.

    4. சளி கட்டி அறுவைச் சிகிச்சை ஒரு முறை செய்தால், மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய நிலை வரும் என சொல்லப்படுகிறதே? அது உண்மையா? வேறு என்ன நவீன சிகிச்சை முறைகள் உள்ளன?
    முன்பு, 'சைனஸ் பஞ்சர்' என்ற முறையில், ஊசி மூலம் சளியை அகற்றும் முறை பின்பற்றப்பட்டது. இதில், வலி இருக்கும். பலருக்கு, திரும்ப திரும்ப எடுக்க வேண்டிய நிலை இருந்தது. இதெல்லாம், 20 ஆண்டுகளுக்கு முந்தைய கதை. இப்போது நவீன வசதிகள் வந்து விட்டதால், பயம் தேவையில்லை. 'எண்டோஸ்கோபி' என்ற கேமரா பொருத்தப்பட்ட கருவி மூலம், வீடியோ திரையில், மூக்கின் அனைத்து பாகங்களையும், தெளிவாக பார்க்க முடியும். சைனஸ் அறைகளைக் கூட, மிகத் துல்லியமாக காட்டிவிடும். நோயின் தன்மை அறிய, நோயாளிகளுக்கு மயக்க மருந்து தராமலேயே, பரிசோதிக்க முடியும். மருத்துவமனையில் ஒரு நாள் தங்கினால் போதும். அதனால் காயமோ, தழும்புகளோ ஏற்படாது. எண்டோஸ்கோபி வழியாக சிகிச்சை பெறுவோருக்கு, மீண்டும் சைனஸ் பிரச்னை வருவதில்லை.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: சைனஸ் தொல்லையா? கவலை இல்லை! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top